ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 Jun 2019 10:45 PM GMT (Updated: 10 Jun 2019 7:07 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

வேளாங்கண்ணி,

நாகை அருகே புதுப்பள்ளி கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு இயக்கம் சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்துவது, இந்த போராட்டம் நாளை (புதன்கிழமை) வேதாரண்யம் சாலையில் உள்ள வேட்டைக்காரனிருப்பு பாலம் முதல் செருதூர் பாலம் வரை போராட்டத்தை நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பூவைத்தேடி, காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு உள்ளிட்ட 5 கடலோர மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story