முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:15 PM GMT (Updated: 12 Jun 2019 8:44 PM GMT)

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு, தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் இந்த ஆண்டுக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய முப்படைவீரர் வாரியத்தில் விண்ணப்பிக்காதவர்கள், கலை மற்றும் அறிவியல் கல்வி, தொழிற்கல்வி, பல்தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஒன்று முதல் 12-ம் வகுப்புவரை பயிலும் முன்னாள் படைவீரர் சிறார்களின் பெற்றோர்கள், திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பப் படிவம் பெற்று, உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, கல்வி உதவித்தொகை பெற்று செல்லலாம்.

வங்கிக்கடன்

கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூ.10 ஆயிரம், தொழிற்கல்விக்கு ரூ.10 ஆயிரம், பல்தொழில்நுட்பக் கல்விக்கு ரூ.20 ஆயிரம், 1 முதல் 5-ம் வகுப்பு வரைக்கு ரூ.500-ம், 6 முதல் 8-ம் வகுப்பு வரைக்கு ரூ.800-ம், 9 முதல் 10-ம் வகுப்புவரைக்கு ரூ.ஆயிரம், 11 முதல் 12-ம் வகுப்பு வரைக்கு ரூ.1,500-என கல்விஉதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் சுயதொழில் செய்வதை ஊக்கப்படுத்திடும் வகையில் வங்கிக்கடன் வட்டி மானியமும், போர்விதவைகளுக்கு வீடு புதுப்பித்தலுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது. விருப்பமும், தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story