திருவையாறு அருகே பரிதாபம் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
திருவையாறு அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அணைக்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் தரணிதரன் (வயது7). செம்மங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த தரணிதரன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலுக்கு சென்றான். அங்கு வயலில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தன. இந்த மின்கம்பியை விளையாட்டாக சிறுவன் தரணிதரன் தொட்டான்.
பரிதாப சாவு
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தரணிதரன் சம்பவ இடத்திலேயே கிடந்தான். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தரணிதரனை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அணைக்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் தரணிதரன் (வயது7). செம்மங்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த தரணிதரன் நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறத்தில் உள்ள வயலுக்கு சென்றான். அங்கு வயலில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடந்தன. இந்த மின்கம்பியை விளையாட்டாக சிறுவன் தரணிதரன் தொட்டான்.
பரிதாப சாவு
இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட தரணிதரன் சம்பவ இடத்திலேயே கிடந்தான். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தரணிதரனை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story