கடையில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்


கடையில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:44 PM GMT)

சேலத்தில் கடையில் பதுக்கிய 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்,

தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சேலம் மாநகராட்சிக்குட்பட்ட வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ததுடன் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளருக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில், மாநகர் நல அலுவலர் பார்த்திபன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடையில் இருந்த 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story