அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 16 Jun 2019 10:15 PM GMT (Updated: 16 Jun 2019 7:26 PM GMT)

அய்யம்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.

அய்யம்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள காவலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் வினோத் என்ற செந்தமிழ்ச்செல்வன்(வயது28). இவருக்கு திருமணமாகி மங்கையர்க்கரசி என்ற மனைவியும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். செந்தமிழ்ச்செல்வன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று தனது உறவினர் வீட்டு திருமணத்துக்காக காவலூர் வந்த செந்தமிழ்ச்செல்வன் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டின் மாடியில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

பரிதாப சாவு

நள்ளிரவில் மாடியிலிருந்து கீழே இறங்கிய அவர் அங்கு இருந்த மின்சார வயரை எதிர்பாராத விதமாக கையால் பிடித்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் மயங்கி விழுந்த செந்தமிழ்ச்செல்வனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செந்தமிழ்ச்செல்வனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story