மயிலாப்பூரில் ஆஸ்பத்திரி, கடைகளில் ரூ.4½ லட்சம் திருடிய வாலிபர் கைது


மயிலாப்பூரில் ஆஸ்பத்திரி, கடைகளில் ரூ.4½ லட்சம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2019 10:00 PM GMT (Updated: 25 Jun 2019 6:58 PM GMT)

மயிலாப்பூரில் ஆஸ்பத்திரி மற்றும் கடைகளில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

மயிலாப்பூர் மாதா சர்ச் சாலையில் டாக்டர் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான ஆஸ்பத்திரி, அகஸ்டின் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை, காய்கறி கடைகளின் பூட்டுகளை உடைத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் மயிலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் சிங் தலைமையில் போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பூட்டை உடைத்து திருடிய நபரை அடையாளம் கண்டு ரகசியமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரி, கடைகளில் திருடியதாக சென்னை லைட்ஹவுஸ் பகுதியை சோந்த மார்க்ஸ் (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.65 ஆயிரம் மீட்கப்பட்டது.

Next Story