கும்பகோணத்தில் புதிய கல்வி கொள்கை நகலை எரித்து மாணவர்கள் போராட்டம்


கும்பகோணத்தில் புதிய கல்வி கொள்கை நகலை எரித்து மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:45 PM GMT (Updated: 25 Jun 2019 7:22 PM GMT)

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நகலை எரித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நேற்று போராட்டம் நடந்தது.

கும்பகோணம்,

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நகலை எரித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நேற்று போராட்டம் நடந்தது. கும்பகோணம் அரசு கலை கல்லூரி முன்பு நடந்த இந்த போராட்டத்துக்கு மாணவர் சங்க நகர தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பாலகுரு, மாவட்டகுழு உறுப்பினர் விக்னேஷ், கிளை செயலாளர் ராஜ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கோஷங்களை எழுப்பி, நகலை எரித்தனர். 

Next Story