புதுவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு; பதவி உயர்வு வழங்கியதில் குளறுபடி


புதுவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு; பதவி உயர்வு வழங்கியதில் குளறுபடி
x
தினத்தந்தி 26 Jun 2019 11:00 PM GMT (Updated: 26 Jun 2019 8:26 PM GMT)

பதவி உயர்வு வழங்கி குளறுபடியாக அறிவித்து இருப்பதால் புதுவை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் இதற்கான பணி மூப்பு பட்டியல் தொடர்பாக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதனால் அந்த பதவி உயர்வு உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது பணி மூப்பு சீரமைக்கப்பட்டு புதிதாக 21 பேர் பட்டியலை காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் சூப்பிரண்டு கொண்டா வெங்கடேஸ்வரராவ் வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் இடம்பிடித்த 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். 8 பேர் பணி ஓய்வு பெற்று விட்டனர். மீதம் உள்ள 11 பேரில் பலர் கடந்த ஆண்டே போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகின்றனர். போலீஸ் துறையில் அதிகாரிகளின் பணி நிலை என்ன என்பதை கூட சரிபார்க்காமல் பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கி குளறுபடியாக அறிவித்து இருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story