ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை நடவடிக்கை


ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு; இலங்கை கடற்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2019 10:45 PM GMT (Updated: 26 Jun 2019 9:43 PM GMT)

ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

ராமேசுவரம்,

தமிழகத்தில் 60 நாள் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு கடந்த 14–ந்தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து 700–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500–க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எச்சரித்துக்கொண்டே வந்தனர்.

அதனை தொடர்ந்து ராமேசுவரம் ராமதீர்த்தம் தெற்கு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதில் இருந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

4 பேரையும் இலங்கையின் நெடுந்தீவு பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தது இதுவே முதல்முறை ஆகும். இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story