தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல்


தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 29 Jun 2019 10:45 PM GMT (Updated: 29 Jun 2019 7:19 PM GMT)

தாசில்தார் கண்டித்ததால் ஆமூர் கிராம நிர்வாக அதிகாரி தற்கொலை மிரட்டல்.

முசிறி,

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவுக்கு உட்பட்டது ஆமூர் வருவாய் கிராமம். இங்கு கிராம நிர்வாக அதிகாரியாக கண்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் பணிக்கு சரியாக வரவில்லை என்று புகார் எழுந்ததை தொடர்ந்து, அவரை முசிறி தாசில்தார் சுப்பிரமணியன் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கண்ணன், நேற்று முசிறி தாலுகா அலுவலகத்துக்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டிலுடன் வந்தார். அப்போது, தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு இருந்தவர்களிடம் கிராமநிர்வாக அதிகாரி கண்ணன் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை ஊழியர்கள் அவர் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story