பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 6 July 2019 11:15 PM GMT (Updated: 6 July 2019 9:20 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடமான மாட்டுங்கா - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9.53 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் மாட்டுங்கா - முல்லுண்டு இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். அப்போது விரைவு ரெயில்கள் அனைத்து ரெயில்நிலையங்களிலும் நின்று செல்லும். இதன்காரணமாக மின்சார ரெயில்கள் 10 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படும்.

துறைமுக வழித்தடத்தில் இன்று காலை 11.10 மணி முதல் பிற்பகல் 3.40 மணி வரை வடலா ரோடு - மான்கூர்டு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.44 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர், பன்வெலுக்கு மின்சார ரெயில் சேவை இருக்காது. இதேபோல காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.47 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் இந்த நேரத்தில் பன்வெல் - மான்கூர்டு இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை சாந்தாகுருஸ் - மாகிம் இடையே ஸ்லோ வழித்தடத்தில் பரமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த நேரத்தில் ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் கார் ரோடு - மும்பை சென்ட்ரல் இடையே விரைவு ரெயில் வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் மாகிம், மாட்டுங்கா ரோடு, பிரபா தேவி, லோயர் பரேல், மகாலெட்சுமி ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது. இந்த தகவல்களை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

Next Story