திருக்கோவிலூரில், தபால் ஊழியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


திருக்கோவிலூரில், தபால் ஊழியர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 July 2019 10:45 PM GMT (Updated: 7 July 2019 11:28 PM GMT)

திருக்கோவிலூரில் தபால் ஊழியரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிஷிவந்தியம்,

திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் சித்தலிங்கமடத்தில் தபால் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோமதி (வயது 29). இவர்களுக்கு 3 வயதில் சுகபிரியா என்கிற மகளும், 1 வயதில் சபரிகிரி என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனனவி இருவரும் தங்களது 2 குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காதுகுத்த முடிவு செய்தனர். இந்த விழாவுக்கான அழைப்பிதழில் உறவினர்கள் பெயர் சேர்ப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார். இதில் மனமுடைந்த கோமதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்த தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்த கோமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story