திராவகத்தை குடித்து பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி


திராவகத்தை குடித்து பெண் போலீஸ் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 7 July 2019 11:49 PM GMT (Updated: 7 July 2019 11:49 PM GMT)

விருதுநகர் அருகே திராவகத்தை குடித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர்,

விருதுநகரை அடுத்த வச்சக்காரபட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் விமலா(வயது 30). இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. தற்போது வரை அவர் பிரசவ விடுப்பில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த சில வாரங்களாகவே விமலாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் விமலா திராவகத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு விமலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திராவகத்தை குடித்து பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story