உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது


உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2019 10:30 PM GMT (Updated: 10 July 2019 7:50 PM GMT)

உத்திரமேரூர் அருகே பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

உத்திரமேரூர்,

உத்திரமேரூர் அடுத்த பெருநகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பெட்ரோல் போட கூறினார்கள். பெட்ரோல் பங்க் ஊழியர் தினகரன் (வயது 47) பெட்ரோல் நிலையத்தை மூடி விட்டோம். பெட்ரோல் போட இயலாது என்று கூறினர். அதற்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் நாங்கள் வக்கீல்கள் எங்களுக்கே பெட்ரோல் இல்லையென்று சொல்கிறாயா என்று கூறி தினகரனை சரமாரியாக தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து தினகரன் பெருநகர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து பையனூர் காலனியை சேர்ந்த இந்தியன் என்கிற அப்பு (22), அதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் (22) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கியதையும், மேலும் தாங்கள் இருவரும் வக்கீல்கள் இல்லை என்பதையும் ஒப்புகொண்டனர்.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து உத்திரமேரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


Next Story