கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் நாளை ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு


கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் நாளை ரத்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 12 July 2019 11:30 PM GMT (Updated: 12 July 2019 6:54 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக நாளை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடற்கரை-தாம்பரம் இடையே கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 மணி, மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30, 2, 2.30 மணிக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.45, 10.55, 11.15, 11.25, 11.35 மணி, மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, 2.15, 2.30, 3, 3.10 மணிக்கு இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11, 11.50 மணி, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45 மணி, கடற்கரை-அரக்கோணம் மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல் செங்கல்பட்டு-கடற்கரை காலை 11.30 மணி, மதியம் 12.20, 1, 1.50 மணி, காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 9.15 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக கடற்கரை-தாம்பரம்-கடற்கரை இடையே 8 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11, 11.45 மணி, மதியம் 12.10, 12.40, 1.05, 1.20, 2.05, 2.40 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.10, 11.30, 11.45, 12.15, 12.55, 1.35, 2, 2.35 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது.

சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே மதியம் 12, 3.10 மணி, மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை இடையே மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(சனிக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் இடையே இன்று மாலை 4.05 மணிக்கு சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

சென்னை கடற்கரை-அரக்கோணம் இடையே நள்ளிரவு 1.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 18-ந்தேதி வரை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு வண்ணாரப்பேட்டையில் இருந்து இயக்கப்படும்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையே இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் வருகிற 17-ந்தேதி வரை கொருக்குப்பேட்டை-வண்ணாரப்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரை ரெயில் நிலையத்துக்கு பதிலாக மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்துக்கு இயக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story