கடலூரில், நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்


கடலூரில், நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி - கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 July 2019 10:45 PM GMT (Updated: 12 July 2019 9:10 PM GMT)

கடலூரில் நீர்நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர், 

ஜல் சக்தி அபியான் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகி றது. இதன்படி கடலூர் மாவட்டத்தில் பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு, ஆழ்துளை கிணறுகளை மறுசீரமைக்க வேண்டும். நீர் நிலை மேலாண்மை, மரக்கன்றுகள் வளர்த்தல், பசுமை காடுகளை உருவாக்குதல் குறித்து விழிப்புணர்வு பேரணி கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி அய்யனார்கோவில் அருகில் நடந்தது.

பேரணியை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சி.கே. என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இந்த பேரணி சாவடி மெயின்ரோடு வழியாக தென்பெண்ணையாறு அருகே உள்ள அக்‌‌ஷரா வித்யாஸ்ரம் பள்ளி அருகில் முடிவடைந்தது.

முன்னதாக இந்த பேரணியில் சி.கே. என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகள் நட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடியும், கோ‌‌ஷங்களை எழுப்பியபடியும் பேரணியாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி துண்டுபிரசுரத்தையும் கலெக்டர் அன்புசெல்வன் அப்பகுதி மக்களிடம் வழங்கினார். பேரணியில் சி.கே.கல்லூரி அலுவலக அதிகாரி சீனுவாசன், தூய்மை பாரத இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரு‌‌ஷ்ணமூர்த்தி, சுப்பிரமணியன், அலுவலக மேற்பார்வையாளர் கல்யாணி மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள், சி.கே.கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story