காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு சாவு - தக்கலை அருகே பரிதாபம்


காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு சாவு - தக்கலை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 12 July 2019 11:00 PM GMT (Updated: 12 July 2019 9:28 PM GMT)

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே குமாரகோவில் இளங்கடை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பதாஸ் (வயது 34), கொத்தனார். இவரும், அதே பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (26) என்பவரும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

திருமணம் முடிந்த பின் அய்யப்பதாஸ் கேரளாவில் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். அப்போது, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் அந்த வேலையை விட்டு விட்டு உள்ளூரிலேயே அய்யப்பதாஸ் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அய்யப் பதாஸ் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரை உறவினர்கள் காப்பாற்றி விட்டனர். இதன் பிறகும் கணவன், மனைவி இடையிலான பிரச்சினை தீர்ந்தபாடில்லை. சின்ன விஷ யம் கூட அவர்களுக் கிடையே பெரிய பிரச்சினை யாக உருவெடுத்தது.

இதனால் கோபித்து கொண்டு ஐஸ்வர்யா, தனது மகன் மற்றும் மகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி யின் இந்த செயலால் அய்யப்பதாஸ் மிகவும் மன முடைந்த நிலையில் காணப் பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அய்யப்ப தாஸ் வீட்டின் கதவு வெகு நேரமாக திறக்கப் படாமல் இருந்தது. அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த அய்யப் பதாசின் தாயார் நாகவள்ளி, இதனை கவனித்து வீட்டின் கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து அய்யப்பதாஸ் கதவை திறக்க வில்லை.

சந்தேகமடைந்த அவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, அங்கு அய்யப் பதாஸ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அவர் கதறி அழுதார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் திரண் டனர். பின்னர் தற்கொலை குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள். காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story