கிளியனூர் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது


கிளியனூர் அருகே, காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் - டிரைவர் கைது
x
தினத்தந்தி 14 July 2019 10:45 PM GMT (Updated: 14 July 2019 6:00 PM GMT)

கிளியனூர் அருகே காரில் கடத்திய மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்,

கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை கிளியனூர் அருகே உள்ள கொஞ்சுமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காருக்குள் 1,440 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே உள்ள மாத்தூர்திருக்கை கிராமத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 30) என்பதும், புதுச்சேரியில் இருந்து காஞ்சீபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதிக்கு மதுபாட்டில்களை கடத்திச்சென்றபோது பிடிபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து தட்சிணாமூர்த்தியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Next Story