தஞ்சையில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் தேங்கியது


தஞ்சையில் பலத்த மழை சாலைகளில் தண்ணீர் தேங்கியது
x
தினத்தந்தி 14 July 2019 11:00 PM GMT (Updated: 14 July 2019 8:51 PM GMT)

தஞ்சையில் நேற்று பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை செய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல வெயில் கொளுத்தியது. மதியத்துக்குப்பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காட்சிஅளித்தது. பின்னர் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் மாலை 6.45 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அரைமணி நேரத்திற்கு மேல் இடைவிடாது மழை பெய்தது.

இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கி காணப்பட்டது. தஞ்சை மேரீஸ்கார்னரில் உள்ள ரெயில்வே கீழ்பாலம், அண்ணாசிலை, மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு மழைநீர் தேங்கி காணப்பட்டது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்யத்தொடங்கி இருப்பது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story