கீழ்வேளூர் அருகே, வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


கீழ்வேளூர் அருகே, வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 July 2019 10:15 PM GMT (Updated: 17 July 2019 7:03 PM GMT)

கீழ்வேளூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூரை அடுத்த பழையனூர் மேல்பாதி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பிரேம்நாத் (வயது 18). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் பிரேம்நாத்தை கண்டித்தனர். இதில் மனம் உடைந்த அவர் வீட்டிற்கு அருகில் இருந்த புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேம்நாத் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

கீழ்வேளூரை அடுத்த சிக்கல் வடக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 55). பால் வியாபாரி. இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வலி அதிகமானதால் குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமார் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story