ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது


ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 17 July 2019 10:45 PM GMT (Updated: 17 July 2019 9:40 PM GMT)

ஆஸ்பத்திரிக்கு 5 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வேன் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பண்டிதமேடு கிராமத்தை சேர்ந்த 33 வயது பெண் தனது 5 வயது மகளுடன் கடந்த 4-ந் தேதி திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இது குறித்து அவரது கணவர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில், தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்யும் வடக்கு மாமல்லபுரம் அண்ணல் காந்தி தெருவை சேர்ந்த சரவணன் என்கிற ஸ்கைலப் (40) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் மகளை கடத்தி சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.

விசாரணையில், சரவணன் கன்னியாகுமரி, கேரள மாநிலம் கோவளம் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரிலும் கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது.

அப்போது சரவணன் அந்த பெண்ணுடன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் பெண்ணிடம் இருந்த ¼ பவுன் மோதிரத்தையும் விற்றார். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சரவணன் எப்போதும் தாடியுடன் காணப்படும் அவர் தன்னை யாரும் அடையாளம் காணாத வகையில் மொட்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் மதுராந்தகத்தில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் கைது செய்தனர். பின்பு கடத்தப்பட்ட தாய், குழந்தையை மீட்டனர்.

Next Story