நாளை முதல் ஆகஸ்டு 25-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-தாம்பரம் இடையே 29 மின்சார ரெயில்கள் ரத்து


நாளை முதல் ஆகஸ்டு 25-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-தாம்பரம்  இடையே 29 மின்சார ரெயில்கள் ரத்து
x
தினத்தந்தி 19 July 2019 11:00 PM GMT (Updated: 19 July 2019 7:39 PM GMT)

பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் ஆகஸ்டு 25-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை-தாம்பரம் இடையே நாளை 29 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை 15 மின்சார ரெயில்களும், தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே காலை 10.45 மணி முதல் மதியம் 3.10 மணி வரை 14 மின்சார ரெயில்களும் என மொத்தம் 29 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11, 11.50 மணி, மதியம் 12.30, 1, 1.45, 2.15, 2.45 மணி, கடற்கரை-அரக்கோணம் மதியம் 12.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மணி, மதியம் 12.20, 1, 1.50 மணி, காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 9.15 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

பயணிகளின் வசதிக்காக கடற்கரை-தாம்பரம்-கடற்கரை இடையே நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் 8 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11, 11.45 மணி, மதியம் 12.10, 12.40, 1.05, 1.20, 2.05, 2.40 மணிக்கும், கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.10, 11.30, 11.45, 12.15, 12.55, 1.35, 2, 2.35 மணிக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இதேபோல் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 1.40 மணி வரை 18 பறக்கும் ரெயில்களும், வேளச்சேரி-கடற்கரை இடையே காலை 8.10 மணி முதல் மதியம் 1.50 மணி வரை 18 பறக்கும் ரெயில்களும் என 36 பறக்கும் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story