விழுப்புரம் அருகே காரில் கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்


விழுப்புரம் அருகே காரில் கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 July 2019 10:15 PM GMT (Updated: 20 July 2019 7:04 PM GMT)

விழுப்புரம் அருகே காரில் கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டுகள் செந்தில்நாதன், அன்வர்பா‌ஷா, சங்கர் ஆகியோர் நேற்று அதிகாலை 2 மணியளவில், கண்டமங்கலம் அருகே பள்ளித்தென்னல் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் காரை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த காரை போலீசார் சோதனை செய்ததில் அந்த காரினுள் 12 அட்டைப்பெட்டிகளில் 336 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், இந்த மதுபாட்டில்களை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் பகுதிக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கார் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story