திருப்பாலை, மகாத்மாகாந்தி நகர், புதூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


திருப்பாலை, மகாத்மாகாந்தி நகர், புதூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 21 July 2019 10:15 PM GMT (Updated: 21 July 2019 10:11 PM GMT)

திருப்பாலை, மகாத்மாகாந்தி நகர், புதூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

மதுரை,

மதுரை திருப்பாலை, மகாத்மா காந்தி நகர்,கோ.புதூர் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் நாளை(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி அன்று காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கோ.புதூர் துணைமின்நிலையத்துக்கு உட்பட்ட கோகலே ரோடு, வெங்கட்ராமன் தெரு, லஜபதிராய் ரோடு, பழைய அக்ரகாரம், சப்பாணி கோவில் தெரு, சரோஜி தெரு, பாரதி உலா சாலை, ஜவகர்,வல்லபாய், பெசன்ட் சாலை, ஜவகர்புரம், ஆத்திகுளம், குறிஞ்சிநகர், கனகவேல்நகர், பாலமந்திரம் ஒருபகுதி, பி.டி.ஆர். மகால் அருகில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

மகாத்மா காந்தி நகர் துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட விசுவநாதபுரம், மகாத்மாகாந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம்.

திருப்பாலை பகுதியில் திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர்காலனி, விசுவநாதபுரம், குலமங்கலம், கண்ணனேந்தல், சூர்யாநகர், ஊமச்சிகுளம், அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலை, வலையபட்டி, கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர் மற்றும் சுற்றுவட்டார பதிகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Next Story