சிறுமியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மகிளா கோர்ட்டு உத்தரவு


சிறுமியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மகிளா கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 July 2019 10:15 PM GMT (Updated: 25 July 2019 10:04 PM GMT)

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட இலந்தைபட்டியை சேர்ந்தவர் சின்னமாடசாமி. இவருடைய மகன் கருப்பசாமி (வயது 25). இவர் கடந்த 16.1.2016 அன்று, 16 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். மேலும் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் கருப்பசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குமார்சரவணன் விசாரித்தார். அவர் கருப்பசாமிக்கு சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக 7 ஆண்டும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 7 ஆண்டும் சிறை தண்டனை விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ரூ.5 ஆயிரம் அபராதம், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சுபாஷிணி ஆஜரானார்.

Next Story