திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு பொது வினியோக திட்டத்திற்காக 1,185 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது


திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு பொது வினியோக திட்டத்திற்காக 1,185 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது
x
தினத்தந்தி 31 July 2019 10:15 PM GMT (Updated: 31 July 2019 6:39 PM GMT)

திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,185 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அரவை செய்யப்பட்டு, அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது வினியோக திட்டத்திற்காக பல மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

1,185 டன் அரிசி

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் 85 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். அதனை தொடர்ந்து 20 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 1,185 டன் அரிசி பொதுவினியோக திட்டத்திற்காக திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story