நாகர்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு


நாகர்கோவிலில் பட்டப்பகலில் துணிகரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2019 10:15 PM GMT (Updated: 6 Aug 2019 9:06 PM GMT)

நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் 8 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்துச் சென்றார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் அருகே உள்ள தோவாளை முத்துநகரை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 63). வள்ளியம்மாளின் உறவினர் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். வள்ளியம்மாள், நேற்று அவரை பார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்புவதற்காக நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது தோவாளை வழியாக செல்லும் பஸ் வந்தது. கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இருந்தாலும் வள்ளியம்மாள் பஸ்சில் ஏறிவிட்டார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்மநபர், வள்ளியம்மாள் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்ததாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதனால் அதிர்ச்சி அடைந்த வள்ளியம்மாள், யாரோ தங்க சங்கிலியை பறித்து விட்டனர் என்று சத்தம் போட்டார். ஆனாலும் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் அண்ணா பஸ் நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story