கோபி அருகே பரிதாபம்; மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; மளிகைகடைக்காரர் சாவு
கோபி அருகே மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் மளிகைகடைக்காரர் பரிதாபமாக இறந்தார்.
கடத்தூர்,
கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவருடைய மனைவி சுசீலா (46). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணேசன், கோபி அருகே உள்ள முருகன்புதூரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை முருகன்புதூரில் இருந்து கணக்கம்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார்.
கோபி அருகே மணியக்காரன்தோட்டம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்த கணேசனுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த கணேசனின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 48). இவருடைய மனைவி சுசீலா (46). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணேசன், கோபி அருகே உள்ள முருகன்புதூரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை முருகன்புதூரில் இருந்து கணக்கம்பாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டு இருந்தார்.
கோபி அருகே மணியக்காரன்தோட்டம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்த கணேசனுக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் இறந்த கணேசனின் உடலை பார்த்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story