நாட்டு வெடிகுண்டு வெடித்து கணவன்- மனைவி படுகாயம்
ஆம்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர்.
ஆம்பூர்,
ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கிராமம் பாண்டவநெறி வட்டம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 36), விவசாயி. இவரது மனைவி கவிதா (30). இவர்கள் தங்களுடைய மாடுகளை அப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நூல் சுற்றப்பட்டு பந்து போன்ற ஒரு பொருள் இருந்தது. அதை குமரேசன் கையில் எடுத்து பார்த்துவிட்டு தன்னுடைய மனைவியிடம் காட்டியுள்ளார்.
மேலும் அதை பிரித்து பார்க்க முயன்ற போது திடீரென வெடித்தது. அதில் குமரேசனுக்கு 2 கைகளும், கவிதாவிற்கு காலிலும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக 2 பேரும் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என்பது தெரிந்தது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கிராமம் பாண்டவநெறி வட்டம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 36), விவசாயி. இவரது மனைவி கவிதா (30). இவர்கள் தங்களுடைய மாடுகளை அப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நூல் சுற்றப்பட்டு பந்து போன்ற ஒரு பொருள் இருந்தது. அதை குமரேசன் கையில் எடுத்து பார்த்துவிட்டு தன்னுடைய மனைவியிடம் காட்டியுள்ளார்.
மேலும் அதை பிரித்து பார்க்க முயன்ற போது திடீரென வெடித்தது. அதில் குமரேசனுக்கு 2 கைகளும், கவிதாவிற்கு காலிலும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக 2 பேரும் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
போலீஸ் விசாரணையில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு என்பது தெரிந்தது. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story