மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Aug 2019 11:00 PM GMT (Updated: 8 Aug 2019 5:01 PM GMT)

மத்திய அரசை கண்டித்து வேதாரண்யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம்,

தேசிய புலனாய்வு சட்டம், முத்தலாக் தடை சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், தேசிய மருத்துவக் கவுன்சில் சட்டம், தொழிலாளர் சட்டம், அணைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் செய்த மத்திய அரசை கண்டித்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய சங்க செயலாளர் துரைராஜ் மற்றும் கோவி.சுப்பிரமணியன், முத்துராமலிங்கம் உள்பட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Next Story