குடவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் பலி சரக்கு ஆட்டோ மோதியது


குடவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் பலி சரக்கு ஆட்டோ மோதியது
x
தினத்தந்தி 11 Aug 2019 10:15 PM GMT (Updated: 11 Aug 2019 6:51 PM GMT)

குடவாசல் அருகே சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் பலியானான்.

குடவாசல்,

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புவனம் கீழசாலை பகுதியை சேர்ந்தவர் முகமதுஜான். இவருடைய மகன் முகமதுநபீல் (வயது 17), நாச்சியார்கோவில் அருகே உள்ள வண்டுவாஞ்சேரி உடையார் தெருவை ரவி மகன் ஆகாஷ் (17), கடலூர் மாவட்டம், சிதம்பரம் பூதகனி தெருவை சேர்ந்த அப்துல்காதர் மகன் சைபுல்லா (17). இவர்கள் 3 பேரும் திருபுவனத்தில் இருந்து எரவாஞ்சேரிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். குடவாசல் அருகே உள்ள செவந்திநாதபுரம் மாதா கோவில் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த சரக்கு ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் முகமதுநபீல் பரிதாபமாக இறந்தான். ஆகாஷ், சைபுல்லா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து எரவாஞ்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணசுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story