பட்டுக்கோட்டை அருகே தீயில் எரிந்து 3 கூரை வீடுகள் நாசம் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்


பட்டுக்கோட்டை அருகே தீயில் எரிந்து 3 கூரை வீடுகள் நாசம் ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:15 PM GMT (Updated: 11 Aug 2019 7:48 PM GMT)

பட்டுக்கோட்டை அருகே தீயில் எரிந்து 3 கூரை வீடுகள் நாசமடைந்தன. இதில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை- முத்துப்பேட்டை சாலையில் தாலுகா அலுவலகம் எதிரே வசிப்பவர் ஜெயலட்சுமி(வயது58). இவரது கூரை வீடு நேற்று காலை 8 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் அருகே இருந்த 2 கூரை வீடுகளுக்கும் தீ பரவியது. இதில் 3 வீடுகளிலும் இருந்த டி.வி., மோட்டார் சைக்கிள், பீரோ, துணிகள், ரேசன்கார்டு, ஆதார்கார்டுகள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமடைந்தன.

மின்கசிவு

இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி சித்தார்த்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமடைந்து விட்டன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து பட்டுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story