வண்டலூர் உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி


வண்டலூர் உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:19 PM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி உலக யானைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

வண்டலூர்,

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உலக சிங்கங்கள் மற்றும் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு கடந்த 8-ந்தேதி பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை, திருவள்ளூர் மற்றும்

காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

போட்டியின் முடிவில் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், பூங்காவில் நேற்று உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட கால்நடை மருத்துவ பயிற்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடயே யானைகளின் பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவை கூடுதல் இயக்குனர் டாக்டர் என்.எஸ்.மனோகரன் மற்றும் பூங்கா உதவி இயக்குனர், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், வனச்சரக அலுவலர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story