பள்ளிகளில் யோகா ஆசிரியைகள் நியமிக்க வேண்டும் இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


பள்ளிகளில் யோகா ஆசிரியைகள் நியமிக்க வேண்டும் இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 2:47 PM GMT)

பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்த ஆசிரியைகள் நியமிக்க வேண்டும் என்று இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலகிருஷ்ணன்புதூர்,

இந்து அன்னையர் முன்னணி மாநில செயற்குழு கூட்டம் நாகர்கோவில் கீழ காட்டுவிளை ஞான வித்யா மந்திர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆத்தி காட்டுவிளை மல்லிகை சிதம்பரநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் விஜய லட்சுமி, மாவட்ட செயலாளர் ராமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூங்கோதை ராஜதுரை, சிவகலாவதி முருகேசன், ராஜேஸ்வரி முருகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். வெள்ளிமலை சைதன்யானந்தஜி மகராஜ் சுவாமிகள் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், அரசுராஜா, பரமேஸ்வரன், மாநில இணை அமைப்பாளர்கள் பொன்னையா, ராஜேஷ், மாநில துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், பூசப்பன், மாநில செயலாளர் தாமு, மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாயக்கூத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

யோகா ஆசிரியை

கூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கண்ட மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்த போதுமான ஆசிரியைகளை நியமிக்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பை ஏற்படுத்தும் “நீட்“ தேர்வு அவசியம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் செல்லன், நெல்லை மாவட்ட கோட்ட செயலாளர் மிசா சோமன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story