கழிவுநீர் கொட்டும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது பொதுமக்கள் மனு


கழிவுநீர் கொட்டும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 6:43 PM GMT)

கழிவு நீர் கொட்டும் இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது என மன்னார்குடி நகராட்சி ஆணையரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

மன்னார்குடி,

மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் மற்றும் பாரி நகர் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு முன்பு வ.உ.சி. சாலை மற்றும் பைபாஸ் சாலை ஆகியவற்றில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆர்.பி.சிவம் நகரின் அருகே நகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுநீர் கொட்டும் இடத்தில் நகராட்சிக்கு சொந்தமான புல் வளர்க்கும் பகுதிக்கு பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

தொற்று நோய்

கழிவு நீர் கொட்டும் பகுதில் உள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரால் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் இதனால் தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளதால் உடனடியாக இந்த கிணற்றில் இருந்து எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கூடாது. பழைய முறையிலேயே வேறு இடங்களில் இருந்து குடிநீரை வினியோகிக்க வேண்டும். மேலும் இதில் தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தங்களுடைய பகுதி வீடுகளில் உள்ள அனைத்து குடிநீர் இணைப்புகளையும் மீண்டும் நகராட்சி இடமே ஒப்படைக்கும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறுகையில், விரைவில் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பிரச்சினை சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். முன்னதாக ஆர்.பி.சிவம் பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து ஆர்.பி.சிவம் நகர் மற்றும் பாரி நகர் பொதுமக்கள் நல சங்க தலைவர் வெங்கடாசலம் தலைமையில் ஊர்வலமாக மன்னார்குடி நகராட்சி நோக்கி வந்தனர். இதில் முன்னாள் தலைவர் ராஜரத்தினம், நிர்வாகிகள் பிரபாகர், சுந்தரமூர்த்தி, சிவராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story