மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி


மாமல்லபுரம் அருகே பஸ்- கார் மோதல்; சென்னையை சேர்ந்த 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 7:25 PM GMT)

மாமல்லபுரம் அருகே பஸ்-கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 பேர் பலியானார்கள்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த கடம்பாடி இ.சி.ஆர். சாலையில் மயிலாடுதுறையில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் புதுச்சேரி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் கார் நொறுங்கி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது.

காரில் பயணம் செயத சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 27), சூரியராஜன் (22) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். காரில் பயணம் செயது காயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

ராஜ்குமார், சூரியராஜன் ஆகியோரது உடல்கள் பிரேத பிரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story