கோட்டக்குப்பம் அருகே, கடலில் மூழ்கி ஓட்டல் ஊழியர் சாவு


கோட்டக்குப்பம் அருகே, கடலில் மூழ்கி ஓட்டல் ஊழியர் சாவு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:45 PM GMT (Updated: 14 Aug 2019 9:55 PM GMT)

கோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி ஓட்டல் ஊழியர் இறந்தார்.

விழுப்புரம்,

புதுச்சேரி தீரன் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரெஜின்ராஜ் மகன் சார்லஸ் ஐசக்ராஜ் (வயது 29). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு பகுதிக்கு சென்று கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நீரில் மூழ்கிய அவரை கடல் அலை இழுத்துச்சென்றது.

உடனே அருகில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து அவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் அவரை தேடினர். இதனிடையே புதுக்குப்பம் கடற்கரையோரமாக சார்லஸ் ஐசக்ராஜின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story