பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


பஸ் மீது கல்வீசி தாக்கிய 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் - தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 10:39 PM GMT (Updated: 14 Aug 2019 10:39 PM GMT)

அரசு பஸ் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் 2 பேருக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி கடந்த 28-09-2014 அன்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் சென்ற போது, புதுக்கோட்டையை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மகன் அய்யப்பராஜ் (வயது 25), சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (24) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் டிரைவர் முருகன் காயம் அடைந்தார்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் சிறுவன் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி கவுதமன் குற்றம் சாட்டப்பட்ட அய்யப்பராஜ், லட்சுமணன் ஆகிய 2 பேருக்கும் தலா 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.


Next Story