கோவில்பட்டியில், நாளை மறுநாள் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறை கேட்கிறார்


கோவில்பட்டியில், நாளை மறுநாள் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறை கேட்கிறார்
x
தினத்தந்தி 14 Aug 2019 10:57 PM GMT (Updated: 14 Aug 2019 10:57 PM GMT)

கோவில்பட்டியில், நாளை மறுநாள் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறை கேட்க உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நாளை மறுநாள் (சனிக்கிழமை) தூத்துக்குடிக்கு வருகிறார். அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியை தொடங்கி வைக்கிறார். மாலை 4 மணிக்கு கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு திட்டங்குளம், கொக்காம்பாறை, வடக்கு திட்டங்குளம், லாயல் மில் காலனி, தாமஸ்நகர், கூசாலிபட்டி, விசுவநாததாஸ் காலனி, லிங்கம்பட்டி, குலசேகரபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்கிறார். அப்போது மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story