மயிலாடுதுறையில், நாளை வேலைவாய்ப்பு முகாம்


மயிலாடுதுறையில், நாளை வேலைவாய்ப்பு முகாம்
x
தினத்தந்தி 15 Aug 2019 10:15 PM GMT (Updated: 15 Aug 2019 7:25 PM GMT)

மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினம் கல்லூரியில் நடக்கிறது. முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு, 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் 18 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு, பிளஸ்- 2, பட்டப்படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், நர்சிங் மற்றும் பார்மசி படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மாற்றுத்திறனாளிகள்

10-ம் வகுப்பு, பிளஸ்- 2 மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகளும் முகாமில் தேர்வு செய்யப்பட உள்ளனர். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (பயோ-டேட்டா) ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வர வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story