நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில், கல்லூரி மாணவருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை - கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


நாமக்கல் குறைதீர்க்கும் கூட்டத்தில், கல்லூரி மாணவருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை - கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 19 Aug 2019 10:45 PM GMT (Updated: 19 Aug 2019 5:07 PM GMT)

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து கல்லூரி மாணவருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகையை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கிகடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 471 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டார்.

மேலும் இந்த கூட்டத்தில் மல்லசமுத்தி்ரம் கீழ்முகம் கிராமத்தில் வசித்து வரும் பழனிவேல் என்பவரது மகன் பரத்குமார் என்ஜினீயரிங் கல்வி பயிலுவதற்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து உயர்கல்வி உதவித்தொகையாக ரூ.50 ஆயிரத்துக்கான வரைவோலையை கலெக்டர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பாலசுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story