அனைத்து பாசன நீர்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்


அனைத்து பாசன நீர்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் அமைச்சர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 19 Aug 2019 11:00 PM GMT (Updated: 19 Aug 2019 6:39 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து பாசன நீர்்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் ஒன்றியம் மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட திருநெய்ப்பேர் வாய்க்கால் தூர்வாரும் பணியினை அமைச்சர் ஆர்.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ஆனந்த் உடனிருந்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டம், வருடாந்திர தூர்வாரும் திட்டம் மற்றும் சிறப்பு தூர்வாரும் திட்டம் ஆகியவற்றின் மூலம் நீர்்நிலைகள் மற்றும் பாசன நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது. கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருவாரூர் மாவட்டத்தில் கடைமடைப்பகுதி வரை சென்றடையும் வரை கிளை வாய்க்கால்கள் முன்னுரிமை அடிப்படையில் விரைவாக தூர்வாரப்படும்.

ஒத்துழைப்பு

துார்வாரும் திட்டத்தினை கண்காணிக்க திருவாரூர் மாவட்டத்திற்கு கணிப்பாய்வு அதிகாரியாக அரவிந்த நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தூர்வாரும் பணிகளை பார்வையிட்டும், நடைபெறும் பணிகளை விரைவில் முடிப்பதற்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். மாவட்டத்தில் உள்ள அனைத்து பாசன நீர்நிலைகளையும் விரைவாக தூர்வார விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், மாங்குடி கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story