லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்டு’ - கலெக்டர் உத்தரவு


லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளர் ‘சஸ்பெண்டு’ - கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 19 Aug 2019 10:45 PM GMT (Updated: 19 Aug 2019 7:13 PM GMT)

லஞ்சம் கேட்ட ஊராட்சி செயலாளரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள நவாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி. இவர், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்ட அனுமதி கேட்டு கலசபாக்கம் ஒன்றியத்தில் விண்ணப்பித்து உள்ளார். வீடு கட்ட அனுமதி ஆணை வழங்க ரஜினியிடம் கங்கவரம் ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மனமில்லாத ரஜினி, ரவிச்சந்திரன் லஞ்சம் கேட்ட ஆதாரத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியின் ‘வாட்ஸ் அப்’பிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுபற்றி விசாரித்து கலெக்டர் கந்தசாமி, ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

Next Story