வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை


வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 Aug 2019 10:45 PM GMT (Updated: 20 Aug 2019 9:01 PM GMT)

ராஜாக்கமங்கலம் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் டிப்ளமோ என்ஜினீயர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜாக்கமங்கலம்,

ராஜாக்கமங்கலம் அருகே சூரப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 25), டிப்ளமோ என்ஜினீயர். படிப்பு ஏற்ற வேலை கிடைக்காததால் கட்டிட வேலையில் கொத்தனாருக்கு உதவியாளராக சென்று வந்தார்.

இதனால் கடந்த சில நாட்களாக சோகத்துடன், விரக்தியில் காணப்பட்டார்.

விஷம் குடித்தார்

சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலை கிடைக்காத விரக்தியில் டிப்ளமோ என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story