கால்பந்து போட்டியில் 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் எளம்பலூர் அரசு பள்ளி முதலிடம்


கால்பந்து போட்டியில் 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் எளம்பலூர் அரசு பள்ளி முதலிடம்
x
தினத்தந்தி 21 Aug 2019 10:45 PM GMT (Updated: 21 Aug 2019 7:49 PM GMT)

பெரம்பலூர் குறுவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான பிரிவில் எளம்பலூர் அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட பள்ளிக் கல்வி துறை சார்பாக பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கால்பந்து போட்டி பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 14, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணிகளும், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான கால்பந்து போட்டியில் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணியும் முதலிடம் பிடித்தன.

பரிசளிப்பு விழா

14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் பெரம்பலூர் ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், போட்டியில் வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் விளையாடவுள்ளனர். வருகிற 26-ந்தேதி 14, 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி பெரம்பலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Next Story