பண்ருட்டி அருகே, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை


பண்ருட்டி அருகே, குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2019 10:45 PM GMT (Updated: 24 Aug 2019 8:11 PM GMT)

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள கொஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செயன். இவரது மனைவி குணசுந்தரி. இவர்களுடைய மகள் நந்தினி (வயது 18). இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குணசுந்தரி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தினி உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story