ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:30 PM GMT (Updated: 24 Aug 2019 10:02 PM GMT)

குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடு முழுவதும் ஆட்டோ மற்றும் மோட்டார் வாகன தொழிலாளர்கள், ஒர்க்‌ஷாப் தொழிலாளர்கள் 7 கோடி பேரின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும் வகையிலும், அரசின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களை ஒழிக்கும் வகையிலும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் பொன்.சோபனராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உதவி தலைவர் அந்தோணி, ஆட்டோ சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவகோபன், அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார், சகாய ஆன்றனி, ஓய்வுபெற்ற போக்குவரத்து நலச்சங்க செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story