கயர்லாபாத், செந்துறை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்


கயர்லாபாத், செந்துறை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 Aug 2019 10:30 PM GMT (Updated: 30 Aug 2019 11:38 PM GMT)

கயர்லாபாத், செந்துறை பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர்,

அரியலூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் அரியலூரில் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜா நகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளூர், ஜமீன்ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, ராஜீவ்நகர், கொளப்பாடி, மணக்குடி, கடுகூர், கோப்பிலியன்குடிகாடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூர், ஒட்டக்கோவில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது. மேலும் பராமரிப்பு பணிகள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே நிறைவுற்றால் உடனடியாக மின்சாரம் வினியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதேபோல் செந்துறை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

செந்துறை துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும், செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறுகடம்பூர், சோழன்குறிச்சி, ஆனந்தவாடி, சென்னிவனம், ராயம்புரம், அகரம், கட்டையன்குடிக்காடு, மருவத்தூர், சேடக்குடிக்காடு, விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சிறுகளத்தூர், மருதூர், வஞ்சினபுரம், நல்லநாயகபுரம், நக்கம்பாடி, மணப்பத்தூர், சோழன்குடிக்காடு, வங்காரம், அயன்தத்தனூர், முல்லையூர், நத்தகுழி, உகந்தநாயகன்குடிக்காடு, பெரியாகுறிச்சி, இலைக்கடம்பூர், நிண்ணியூர், பிலாக்குறிச்சி, வீராக்கன், செதலவாடி, நாகல்குழி, கீழமாளிகை, மத்துமடக்கி ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜெயங்கொண்டம் அருகே நடுவலூர் துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான சுத்தமல்லி, பருக்கள், காக்காபாளையம், சுந்தரேசபுரம், வெண்மான் கொண்டான், உல்லியக்குடி, சாத்தாம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டக்கொல்லை, மூர்த்தியான் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

இதேபோல் அரியலூர் மாவட்டம், திருமானூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வில்சன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கீழப்பழுவூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர்அழுத்த மின் பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் கீழப்பழுவூர், மேலப்பழுவூர், கோக்குடி, சில்லக்குடி, மேத்தால், திம்மூர், கல்லக்குடி, அருங்கால், பொய்யூர் மற்றும் கீழவண்ணம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story