கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு


கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 1 Sep 2019 10:00 PM GMT (Updated: 1 Sep 2019 11:12 PM GMT)

கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் நகைபறிப்பு சம்பவம் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி இலக்கியம்பட்டியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 4 பெண்களிடம் 7 பவுன் நகைகளை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இந்த நகை பறிப்பு சம்பவம் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story