தண்டையார்பேட்டையில் வாலிபரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது


தண்டையார்பேட்டையில் வாலிபரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேர் கைது
x
தினத்தந்தி 2 Sep 2019 10:45 PM GMT (Updated: 2 Sep 2019 9:51 PM GMT)

தண்டையார்பேட்டையில், வாலிபர் ஒருவரை கொலை செய்ய கத்தியுடன் பதுங்கி இருந்த ரவுடிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரம்பூர்,

சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் ரவுடிகள் கத்திகளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் பதுங்கி இருப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மேம்பாலத்தின் கீழே கத்தியுடன் பதுங்கி இருந்த 7 பேரை சுற்றி வளைத்து பிடித்து, போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான சந்தோஷ் (வயது 29), பாஸ்கர் (23) மற்றும் அவர்களது கூட்டாளிகளான சுரேஷ் (29), நாகராஜ் (20), சரவணன்(25), விக்கி(24), ஸ்ரீதர்(20) என்பது தெரிந்தது. 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள், அந்த பகுதியில் மாமுல் வசூல் செய்யவும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரிந்தது. கைதான 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.

Next Story